Wednesday, October 28, 2015

மீரியபெத்த மண்சரிவு - இப்படிக்கு ஒருவருடம் !!

இப்படிக்கு ஒருவருடம் !!

பனி மூடிய சிகரங்களால் ஆன
மலை கிராமம் - மீரியபெத்த
எங்கள் கற்பனைகளின் மையம்

உலுக்கியது மண்ணை மட்டுமல்ல
எங்களது மனங்களையும் தான்

நாம் நடந்த பாதை எங்கே
எம்மோடு பழகிய நண்பர்கள் எங்கே
வசித்த வீடு எங்கே
நேசித்த உயிர்கள் எங்கே
சுவாசித்த காற்று எங்கே

எதிர்பாராமல் நடந்தது
இயற்கையின் கோரதாண்டவம்
எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி
தாண்டவம் ஆடியவர்கள்  - அரசியல் கள்வர்கள்
அது, இது. உது தருவோமென்று....!!

புதையுண்ட இடத்தில்
உயிரின் சதையை தின்ற மண்,
தந்த புற்கள் மட்டும் தான் மிச்சம்!

இன்று செழிப்பாக இருக்கின்றது - புற்கள் மட்டுமே
மண்ணிற்கு உரம் தந்த
எம் உறவுகளின் ஆசைகள்
என்னவாயிற்று ???

தப்பித்தோம் பிழைத்தோம் - என
வந்தர்வர்களின் வாழ்விற்கு
உத்தராவதம் தருவோர் யாரோ...?
(தன்னம்பிக்கை மட்டும் தான்)

எங்கள் வரலாறு நீண்டது போல
வாழ்வும் மண்ணோடு மண்ணாக
நீண்டது ஏனோ....?

No comments:

Post a Comment